இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Monday 14 May, 2007

தில்லுமுள்ளுகளும்? தள்ளுமுள்ளுகளும்? -3

தொடர்வதற்கு முன் ஒரு சின்ன செய்தி. நான் கடைசியாக "பிரான்ஸ் தமிழ் சங்கம்" என்று முடித்ததாலோ என்னவோ இந்த இரெண்டு நாளில் தொலைபேசி அழைப்புகள் பலவும் மின்னஞ்சல்கள் பலவும் வந்துள்ளன. நான் என்னவோ பிரான்ஸ் தமிழ் சங்கத்தை பற்றி விமர்சிக்க போவதாக எண்ணி பல பேர் பல கதைகளை சொன்னார்கள். ஒரு தனிப்பட்ட சங்கத்தில் இருபது இருபத்தைந்து வருடங்கள் முன்னால் நடந்த சம்பவங்களை இப்போது கிளற நான் வரவில்லை. அந்த சங்கத்தின் முன்னால் உறுப்பினராக இருந்தாலும் கூட பரவாயில்லை. எதுவுமே சம்பந்தம் இல்லாமல் தலை இடுவது, வீண் விரோதத்தையே தமிழர்களுக்குள் தோற்றுவிக்குமே அன்றி வேறொரு பலனும் தாராது. ஆனால் அதே நேரத்தில் அனைத்து சங்கங்களும் சேர்ந்து நடத்திய ஒரு பொது நிகழ்ச்சியில் நடைபெற்ற கூத்துகளை பேசுவதில் தவறேதும் இல்லை என்றே எண்ணுகிறேன். நிற்க.


முதலில் இப்பொழுது எடுத்திருக்கும் பாரதியின் 125வது ஆண்டு விழாவை பற்றி பார்ப்போம். இந்த விழாவினை முதலில் நடத்த முடிவு செய்தவர் பிரான்ஸ் தமிழ்வாணி பத்திரிக்கையின் ஆசிரியரும் பிரான்ஸ் முத்தமிழ் சங்கத்தின் தலைவருமான திரு.ஜெயராமன் அவர்கள் என நம்பத்தகுந்த வட்டார செய்திகள் கூறுகின்றன. இவ்விழா பற்றிய யோசனையை திரு ஜெயராமன் அவர்கள் பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவரான (திரு.ஜெயக்குமாருடன் பகிர்ந்து கொண்டதாக) என்று நம்பப்பட்டது தவறு. திரு.ஜெயரரமன் அவர்கள் கம்பன் புகழ் பாடும் கவிஞர் திரு. பாரதிதாசனுடன் தான் கலந்தாலோசித்துள்ளார். பின்னர் திரு.ஜெயக்குமார் அவர்கள் திரு.ஜெயராமன் அவர்களை அனுகியதாகவும், பாரீஸ் தமிழ்ச் சங்கம், கம்பன் கழகம், பிரான்ஸ் முத்தமிச் சங்கம் என்ற மூன்று சங்கங்கள் இணைந்து பாரதி125 விழாவினை நடத்துவோமா என்று கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவ்வோசனையை திரு.ஜெயராமன் நிராகரித்து விட்டதாக தெரிகிறது. அதன் பின்னரே பிரான்ஸ் தமிழ்ச் சங்கம் தாங்கள் அனைத்து தமிழ் சங்கங்களையும் சேர்த்து விழா எடுக்கும் வகையில் பொங்கல் விழா மலரில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்கள். ஆனாலும் கருத்து வேறுபாடுகள் முளைக்க ஆரம்பித்து விட்டன.

பின்னர் பிரான்ஸ் தமிழ் சங்கம் நேரிடையாக அனைத்து தமிழ் சங்கங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியதாக சொல்லப்பட்டிருக்கிறது. அங்கு அனைத்து தமிழ் சங்கம் என்று சொல்லும் போதுதான் சில பிரச்சனைகள் எழும்ப ஆரம்பித்தன. அவர்கள் அனுப்பியதாக சொல்லப்படும் சில நபர்களுக்கு கடிதம் கடைசிவரை சென்றடையவில்லை. அது ஒரு தற்செயலான செயலாகவும் இருக்கலாம். திட்டமிட்டதாகவும் இருக்கலாம். திட்டமிட்டதாக இருக்கலாம் என்று சந்தேகம் வருவதற்கு காரணம் - கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் பட்டியலை பார்க்கும் போது லேசாக விளங்கும். அதாவது முந்தைய விழாக்களான பாரதி நூற்றாண்டு விழாவிலும் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவிலும் கேள்விக் கேட்டவர்களுக்குத் தான் கடிதங்கள் போய் சேராத மாயம் நடந்திருக்கிறது. யார் யார் என்ன என்ன கேள்வி கேட்டார்கள் என்று தானே கேட்கிறீர்கள் ? பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் பிட் நோட்டீஸ் கொடுத்த கொடுங்குற்றத்தை செய்தவர் பேராசிரியர். திரு சக்திப்புயல் அவர்கள். பாரதி நூற்றாண்டு விழாவிற்கு பிறகு நடந்த சில முறை கேடுகளை எதிர்த்து வினா எழுப்பிய தமிழர் இல்லத்தின் தலைவர் திரு.கருணாநிதி அவர்கள்.

அது இன்னாங்க பிட் நோட்டீசுன்னு கேட்குறிங்களா? அதையும் கொடுத்து புடரேன். இது தான் பெராசிரியர் சக்திபுயல் பாவேந்தர் பாரதிதாசன் விழாவில் கொடுத்த பிட் நோட்டீஸ் :

என்ன மச்சான் எங்கெ கௌம்பிட்டீங்க?

பாரிஸில பாவேந்தர் நூற்றாண்டு விழா நடக்குதாம். அதெப்பாக்கப் போறேன்.

வெழா குழு தலைவர் யாரு? பெரிய தமிழறிஞரோ?

இல்லே.

தமிழ்க்கவிஞரோ?

அதுவுமில்லே.
பின்னே வேற என்னதான் செய்யறாரு?

வேலையில்லாம விட்டிலே இருக்காராம்.

அப்போ, வேலை வெட்டி இல்லாதவனெல்லாம் வெழா எடுக்கலாம்னு ஆயிடிச்சா?

அப்படியில்லெ புள்ளெ, அவரும் இந்தியாவிலே இருக்கும்போது யுனெஸ்கோவிலெ வேலை செஞ்சிருக்கராமில்லே?

அப்படி என்ன வேலை? யுனெஸ்கோ தலைவரா? செயலாளரா?

அதெல்லாம் ஒன்னுமில்லெ, ஏதோ எடுபிடி வேலையாம்;, இப்போ வயசாயிட்டு சும்மாயிருக்காராம்.

வயசானா வீட்டிலே செவனேன்னு சும்மாகெடக்கவேண்டியது தானே.

அவரும் செவனேன்னுதான் இருக்காராம். செவன் கோயில்ல அப்பப்ப மணியாட்டறாராம்.

அது சரி செவன் கோயில்ல மணியாட்டறவருக்கு பாரதிதான் வெழாவிலெ என்ன வேலை?

சீரங்கத்து ரங்கநாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி கொண்டு பிளக்கும் நாள் எந்நாளோன்னு பாவேந்தர் எழுதினதா எங்கப்புச்சி சொல்லும். அப்படியிருக்க, இரும்படிக்கிற பட்டறையிலெ இந்த ஈக்கு என்ன வேலை?

எல்லாம் பணம் தான்?

பணமா? என்ன பணம்?

பாவேந்தர் நூற்றாண்டு வெழாவுக்காக இந்திய அரசு பணம் குடுக்குதாம். அதை வாங்கரதுக்காகத்தான் இந்தக் கூத்துன்னு சொல்லிக்கிறாங்க.

காசுக்காக கொள்கையை மாத்திக்கிறவங்க வேசைக்கு சமானம்னு பாவேந்தர் சொன்னதா கேள்விப்பட்டிருக்கேனே?

அதெல்லாம் கொள்கைன்னு ஒன்னு இருக்கிறவங்களுக்குத்தான். கெடைக்கிறதை சுருட்டறதுன்னு கொள்கை வச்சிருந்தா எந்த வெழாவா இருந்தா என்ன. நாற்காலியும் நாலு காசும் கெடைச்சா போதாதா?

அது சரி, தமிழ் நாட்டிலே இருந்து யாரு வந்திருக்காங்கலாம்?

யாரோ நாவலராம்.

என்னது நாவழவழாவா?

இல்லே, அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன்.

ஐய்....யெ, அந்த மனுசனா?

ஏன்? அந்த மனுசனுக்கென்ன கொறை?

இல்லே, பாம்பையும் பாப்பானைனும் கண்டா பாம்மை உட்டுடு, பாபாபனை அடிங்கிற பெரியார் கொள்கையுடையவரு பாவேந்தர். இந்த மனுசன் அந்தப் பாப்பாத்தி காலிலே உழுந்து கெடக்கிறவர். இவரு ஏன் இந்த வெழாவுக்கு வந்தார்.

இவர் வெழாவுக்கு எங்கே வந்தார்? அவர் புள்ளை அமெரிக்கவுல இருக்குதாம். அதைப் பாக்கப் போற வழியிலே இப்படி வந்திருக்காராம். போற போக்கிலே புள்ளையாருக்கு ஒரு கும்புடு போட்டுட்டுப் போறதில்லியா, அது மாதிரி தான்.

பாரதி தாசனையே புள்ளையாராக்கிட்டியே மச்சான்?

சும்மா ஒரு உதாரணத்துக்கு சொன்னேன் புள்ளெ.

நீ உதாரணத்துக்குத் தான் சொன்னெ. ஆனா அந்த சிவனுக்கு மணியாட்டறவர் பாவேந்தருக்கும் பூணுhல் போட்டு, பூரணகும்பம் வச்சி, ஓமம் வளத்தி பூஜை செய்யப்போறாரு பாரு.

அது சரி, அமைச்சர் இங்கெ வந்த விசயம் அவரோட எசமானியம்மாவுக்குத் தெரியுமா?

தெரியாதுன்னு தான் நெனைக்கிறேன்.

அது தானே கேட்டேன். அந்தம்மாவுக்குத் தெரிஞ்சா ஒடனே இவரு சீட்டு கிழிஞ்சிறாதாக்கும்.

அப்படியெல்லாம் நடந்துடுமா? இவர் யாரு? கழுவுற மீன்ல நழுவுற மீனாச்சே. நெடுஞ்சான் கெடையா கால்ல உழுந்து சரிபண்ணிப்புடுவாராக்கும்.

சரி, வேற யாரு வெழா நடத்துறாங்க?

யாரோ பாரிஸ் ஜாமாலாம்.

அதென்னாங்க பா….ரிஸ் ஜமால். பாரிசை வெலைக்கு வாங்கினவரா? இல்லே பாரிசிலேயே பொறந்து வளந்தவரா?

அதெல்லாம் ஒன்னுமில்லே, எல்லாம் நம்ம தமிழ்நாட்டிலே பொற்ந்தவர் தான். ஏதோ ஒரு பெருமைக்கு அப்படி பேரு வச்சிருப்பாரு.

பேர்லிலேய பெருமைக்கு பாரீஸை புடிச்சிக்கிட்டவரு நடத்தற வெழாவிலே எந்தத் தமிழுணர்வை எதிர்பார்க்க முடியும்?

அப்டியில்லே… லால்குடி ஜெயராமன், குன்னக்குடி வைத்தியநாதன், மதுரை சோமு இப்படியெல்லாம் ஊர் பேரைத் தன் பேரோட சேத்து வச்சிக்கிறதில்லையா? அப்படித்தான்.

அது சரி, சங்கீத வித்துவான்கள் தங்களுடைய சங்கீத பரம்பரையை அடையாளம் காட்டவும், தங்கள் வித்தையால் தம் ஊர் பெருமை அடையவும் அப்படிப் பேர் வச்சுக்கிறாங்க. இல்லை இல்லை, மத்தவங்க அந்தப் பேரை அவங்களுக்கு சூட்டறாங்க. இவருக்கு பாரிஸ்ங்கிற பேரை யார் சூட்டினாங்க? ஒரு வேளை பிரெஞ்சிலே மேதையோ?

அப்படியெல்லாம் தப்பாக எடைபோட்டுடாதே. தனக்கு choux என்கிற காய்கறியைக்கூட ஷூன்னு சொல்ல வராது சூன்னு தான் சொல்லமுடியும். அதனாலே கேட்கிற பிரெஞ்சுக்காரங்க காசு என்கிற அர்தத்திலே sous ன்னு புரிஞ்சிக்கிறாங்கன்னு அவரே சொன்னதா கேள்விப்பட்டேன்.

பின்னே எதுக்கு பாரிஸ் பேரை வச்சிக்கிட்டாராம்.

பெருமைக்குத்தான் ஊர் பேரை வச்சிக்கணும்ன்னு சட்டமா என்ன? திருவாரூர் தேவடியாள், சீரங்கத்து ஒலக்கைன்னு சொல்லறதில்லையா?

அது சரி, அவருக்கு தமிழாவது ஒழுங்கா வருமா?

விழான்னு சொல்ல வராதாம். வ்ளான்னு தான் சொல்லுவாராம்.

அப்படியா? வாள்க தமிள்.

அது சரி வ்ளாவிலெ வேறெ யாருக்கு முக்கியப் பொறுப்பாம்?

தமிழ்ச்சங்கத் தலைவர் தசரதனாம்.

அடேயப்பா, தமிழ்ச்சங்கத்துக்கே தலைவரா? மதுரையில பாண்டிய மன்னருங்கல்லம் வச்சி நடத்தி நக்கீரருக்கும் சிவபெருமானுக்கும் போட்டி வந்தததுன்னாங்களே, அந்த மாதிரியா? அது சரி, இந்த சங்கத்திலே மொத்தம் கவியரங்கேறிய புலவர்கள் எத்ததைபேராம்?

இருக்கிறதே தலைவரையும் செயலாலரையும் சேத்து மொத்தம் மூனு பேராம்.

அது சரி இவருக்காவது தமிழ் வருமா?

தமிழ் வரும். ஆனா வீட்டுக்குள்ளே போக முடியாதாம். உள்ளே பிரெஞ்சு வெளியே தமிழாம்.

சரி, இவங்களையெல்லாம் விடு. வெழாவிலே கவியரங்கம் நடக்குதா?

அப்படி ஒன்னும் தெரியலை?

பாவேந்தர் பற்றி ஒரு பட்டி மன்றம்?

பட்டிமன்றம்னா என்னான்னு கேட்டாராம் வெழாக்குழவின் தலைவர்.

வழக்காடு மன்றம்?

யார் மேடையிலே மொதலெடம் புடிக்கிறதுங்கிற வழக்காட்டம் தான் வெழா அமைப்புக் கூட்டத்திலெ காரசாரமா தொடர்ந்து நடந்ததாம். மத்தபடி வெழா மேடையிலெ அப்படி ஒன்னும் இல்லையாம்.

பாவேந்தரைப் பத்தி புத்தகம் ஒன்னும் வெளியிடலியா?

ஒருத்தர் பாவேந்தரைப் பத்தி ஒரு புத்தகம் வெளிட அனுமதி கேட்டாராம். மோதல்ல ஒத்துக்கிட்டு பிறகு நேரமில்லைன்னு மறுத்துட்டாங்களாம்.

அப்படின்னா பாரிஸிலே தமிழ் படிச்சவங்க யாருமே இல்லையா?
பேராசிரியர்கள், நல்ல தமிழறிஞர்களெல்லாம் இருக்கிறாங்களாம். அவர்களுக்கெல்லாம் எடம் கெடையாதுன்னு ஒதுக்கிட்டாங்களாம்.

நல்..ல தமிழறிஞருன்னு சொல்லிட்டியே, அவங்களை சேத்துக்குவாங்களா?

நான் ஒன்னு சொல்லட்டுமா மச்சான்?

சோல்லு புள்ளே.

பாவேந்தர் திரும்ப வந்து கேள்வி கேக்கமாட்டரர்ங்கிற தைரியத்திலெ இப்படிப் கூத்தடிக்கிறாங்க. அவர் பாணியிலே சொன்னா இது தற்குறிகள் தற்குறிகளுக்காக நடத்துற வெழா. இதிலே தமிழ்படிச்ச நமக்கென்ன வேலை?

அப்படி நீ என்ன புள்ளெ பெரிசா தமிழ் படிச்சிபோட்டே?

தமிழ்ப் பள்ளிக்கூடத்திலெ எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேனில்லே.

இதாங்க அந்த பிட் நோட்டீசு. இது தான் பெராசிரியர் சக்திபுயல் கொடுத்த பிட் நோட்டீஸ்.

இப்ப நீங்களே சொல்லுங்க இப்ப நடக்கபோற விழாவிற்கு பேராசிரியர் சக்திபுயலை கடிதம் அனுப்பி அழைப்பாங்கன்னு நினைக்கிறீங்க? நானாக இருந்தால் கண்டிப்பாக அழைக்க மாட்டேன். ஆனா பாருங்க அவருக்கு கடிதத்தை இரெண்டு பேர் அனுப்பியிருக்காங்க. அதாவது ஒன்னு இல்லே மொத்தமாக ரெண்டு கடிதம் அனுப்பி இருக்காங்க. அனா ஒன்னு கூட போய் சேரவேயில்லை. அதாவது திரு.ஜெயகுமார் தானே அனுப்பினதாகவும், அதற்கான தபால்துறையின் முத்திரையுடனான சாட்சியும் உள்ளதாக விழாக்குழு கூட்டத்தில் கூறினார். என்னிடம் பேசுகையில் விழா குழுவில் முக்கிய பொறுப்பில் உள்ள மற்றோருவர் தான்தான் அனுப்பியதாக அடித்து சொல்கிறார். ஆக from the above said equation you can very well understand the liableness of the postal department is not satisfactory in france and non other than that.

அப்ப திரு.கருணாநிதிக்கும் ஏங்க தபால்துறை கடிதத்தைக் கொடுக்கவில்லை. அதுக்கும் ஒரு காரணம் இருக்கும் இல்லிங்களா? ஒரு வேளை வீட்டை பூட்டி போட்டுட்டு ஊருக்கு போயிட்டாறா? அதை அடுத்த முறை பார்போங்களா?

தமிழ்வாணி ஆசிரியர் திரு.ஜெயராமன் அவர்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பிய கடிதத்தையும் இங்கு உங்கள் பார்வைக்கு இடுகிறேன்.
கடிதம் இதோ:
வணக்கம்!
தங்களுடைய மின்தளத்தைப் பார்த்தேன். துணிச்சலுக்கு பெரிதும் பாராட்டுகிறேன். பாரதிக்கு விழா எடுப்பது வரவேற்கக்கூடியது. ஆனால் குறிப்பாக ஒரு சிலரையே அல்லது சில சங்கத்தையே ஒதுக்குவது ஆரோக்கியமற்ற செயலாகும்.முதன்முதலில் அவர்கள் அனுப்பிய மடலும் முறைகேடான செயலாகும். இருப்பின் 2007 மே மாதம் 5 ம் தேதி நடைபெற்ற 3 வது செயற்கூட்டம் கூடும் முன்னர்; திரு தசரதன் அவர்கள் வருகைபுரிந்திருந்த அனைத்து தமிழ் அன்பர்களிடம் பாரதி விழாவின் செயற்குழுவினர் மட்டும் உள்ளே வரவேண்டும் என்று சொன்னார்;. பின்னர் சிலர் நான் உட்பட தமிழ் ஆர்வத்தால் மூளைக் கெட்டு உள்ளே சென்றோம். பாரதி விழா என்றால் அவர்கள் சங்கமே முழு பொறுப்பு என்று சொல்லிவிட்டனர். அதில் சில தஞ்சாவ10ர் பொம்மைகளும் இருந்தன. என்ன செய்வது கல்லு}ரி தமிழ் பேராசிரியராகப் பணியாற்றிய திரு பெஞ்சமின் லெபோ வெறுப்புடன் வெளியேறியது வேதனைக்குரியதாகும். இதன் இடையில் பேராசிரியர் திரு சக்திவேல் வெளியிட்ட கருத்துகளும் காற்றோடு கரைந்துவிட்டது. சென்ற முறை நடந்த பாரதிதாசன் நு}ற்றாண்டு விழாவிலும் ஒதுக்கப்பட்டார். அப்போது அவர் வெளியிட்ட துண்டு பிரசுரம் இன்னும் என் நினைவில் உள்ளது. ஏன் இப்படி? சுயநலமும், ஆசையும் உடன் சேர்ந்தால் இந்த விளைவுதானோ?
தொடரும்...

1 comment:

Anonymous said...

கலகத்தால் உலகத்தில் பல விளைவுகள் வரலாம்.
விளைவுகளில் நன்மை தீமை அறியலாம்.
அறிந்ததை அறிவுக் கண்களால்
உணரலாம்.
உணர்ந்ததை உலகுக்கு தெரிவிக்கலாம்.
அவ்வாறு எடுக்கும் முயற்சி வரவேற்கத்தது.
பாரதியின் இரு பக்கத்தையும்
பார்த்த என்னால் உங்களை கண்டிப்பாக
பாராட்டாமல் இருக்க முடியாது.
பாரிசில் இருந்து பாரதியை அரிய
வாய்ப்ப்ளித்த நண்பருக்கு நன்றி.