இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Monday 28 May, 2007

தமிழ்ப் பணி? 2

மாங்க பின்ன எப்படி தாங்க தமிழ்ப் பணி செய்வது? நம்ம இசை ஞானி இளையராஜா செய்வது போல் தமிழ்ப் பணி செய்யவேண்டும். இன்னாங்க அது அவர் திரைப்படத்திற்கு இசை தானே போடுறதா சொன்னாங்க, தமிழ்ப் பணியெல்லாம் எப்படின்னு? தானே பார்க்கின்றீர்கள். சொல்லிட்டாப் போச்சி.
சுத்தி சுத்தி தமிழ், தமிழன் என்றாலே அடுத்து வருவது பெரியார் அவர்கள் தான் இல்லையா? அதையும் விட தமிழ் எழுத்துச்சீர்மை என்று சொல்லே 1935 ஆம் ஆண்டு பெரியார் மும்மொழிந்ததிலிருந்து துவங்குகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதாவது "லை" என்பதை முன்பு "ல" என்ற எழுத்துடன் ஒரு கொம்பை சேர்த்து எழுதும் வழக்கத்தை மாற்றி இப்போதுள்ள "லை"யை நமக்களித்தவர் பெரியார். ஆனால் பிராமண்ய ஆதிக்க சக்திகள் அதை ஏற்காமல் இருந்ததற்கு நிறையவே எடுத்துக்காட்டுகள் உள்ளன. உதாரணத்திற்கு கெ.பாலச்சந்தர் எடுத்த வானமே எல்லை படத்தின் பெயரை அவர் பழைய கொம்பு போட்ட "லை" யுடன் எழுதி தன்னுடைய பெரியாரிய எதிர்ப்பை தெரிவித்திருப்பார். பாலச்சந்தர் அவருடைய இன ஒற்றுமையை எப்படி காண்பிக்கிறார் என்று பாசிட்டிவ்வாக எடுத்துக்க கொள்ளலாம். துக்ளக்கும் அப்படியே.
ம்முடைய இளயராஜாவோ தன் தமிழின உணர்வை காண்பிக்க என்ன செய்திருக்கவேண்டும். மாபெரும் பாக்கியமாக கருதி பெரியாரின் திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கவேண்டும். அனால் அப்படி சேய்யாதது மட்டுமல்லாமல் அதற்கு அவர் சொன்ன காரணம் "என் ஆன்மீகக் கொள்கைகளுக்கு முரணானது பெரியாரின் நாத்திகவாதம். எனவே என்னால் இசையமைக்க முடியாது" என்று திருவாய் மொழிந்தார். அதாவது இளையராஜவுக்கு, பெரியார் என்றால் ஒரு நாத்திகவாதி, ஒரு கடவுள் மறுப்பாளர் என்று மட்டுமெ தெரிந்திக்கிறது என்றால் இளையராஜவின் சமூகப் பார்வையில் உள்ள ஊனத்தின் அளவை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
ளையராஜாவின் மகள் தமிழ் சினிமா பாடலகள் பாடும் போது அப்பாடல் வரிகளை ஆங்கிலத்தில் எழுதிவைத்து தான் பாடுவார் என்று தெரிந்தும் அதைப்பற்றி யாராவது கேட்டோமா? அல்லது இளையராஜாவின் பால்ய நண்பர் , "என் இனிய தமிழ் மக்களே"ன்னு வழிவாரே, அவரது ஒரே மகன், தமிழகத்தில் நடந்த ஒரு மாபெரும் மேடை நிகழ்ச்சியின் போது கலைஞருக்கு முன்னாலேயே தன்னால் தமிழில் பேச முடியாது என்று சொல்லி, அதே இனிய தமிழ் மக்களின் மூகத்தில் கரியை பூசியதைப் பற்றி இப்பொது பேசப் போவதுமில்லை.
னால் வைகைக் கரை மணலில் உட்கார்ந்து பாடப்பட்ட மாணிக்க வாசகரின் திருவாசாகத்தை இசைவடிவம் கொடுத்த இளையராஜாவுக்கு ஏன் தமிழ்நாட்டில் ஒரு இசைக் கலஞன் கூட கிடைக்கவில்லை. இத்துணை ஆண்டுகளுக்கு கழிந்த பிறகும் ஒரு தமிழன் பாடிய பாட்டிற்கான இவரின் சிம்பொனி இசையை வாசிக்க தமிழ் வாத்தியக் கலஞர்கள் கிடைக்காத போன ரகசியம் என்னவோ?
ன்றைக்கு தமிழன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணமான சிலரில், மிக மிக்கியமான தலைவராகிய பெரியாரின் படத்திற்கு இளையராஜாவால் இசையமைக்க முடியாவிட்டால், பின் எப்போது தமிழுக்கு தொண்டு செய்யப் போகிறார். எவ்வளவு முறை முயன்றும் அவரது சாதியின் காரணத்தால் சங்கரமடத்தின் உள்ளே விடாமலும், தமிழை "நீச பாஷை" என்று கூறி, ஒவ்வோரு முறையும் தமிழ் பேசிய பின்பும் , நீரில் குளித்து தீட்டை போக்கிக் கொள்ளும் சங்கராச்சாரி பேசும் ஸ்ம்கிருதம் தான் இளையராஜாவின் தாய்மொழியோ ?
நாலு காசு சேர்ந்து விட்டாலோ, நாலு எழுத்து படித்து விட்டாலோ தமிழர்காளாகிய நாம், முதலில் செய்வது நம்மை தமிழர்களாக இனம் காட்டிக் கொள்ளாமல் இருப்பது. தமிழில் பேசுவதையே கேவலமாக எண்ணுவது. அதுவும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் எதோ தாங்கள் வெள்ளைக் காரனுக்கே பிறந்தது போல் நினைத்துக் கொண்டு நடப்பது. சரி அது போகட்டும்.
மஸ்கிருத வல்லுனராகவும் சென்னை மாகாண முதல்வாராகவும் இருந்த பனகல் அரசர் என்ன செய்தார் என்று நம்ம இளையராஜாவுக்கு சொல்வோமா? சுமார் எண்பது வருடத்திற்கு முன்னால் சென்னை மாகாணத்தில் நிலவிய ஒரு சட்டத்தை திருத்தம் செய்ததாலேயே அவரது பெயர் காலத்தை வென்று நிற்கிறது. அப்படி என்னாங்க ஒரு சட்டம்? ஆமாங்க அப்படி ஒரு சட்டம் அது. அதாவது எண்பது வருடத்திற்கு முன்னால் மருத்துவக் கல்லூரியில் நீங்கள் சேரவேண்டும் என்றால், இப்பொது போலவே நுழைவுத்தேற்வு எழுதித்தான் சேரவேண்டும் . யோவ் அதுல உனக்கு இன்னாய்யா பிரெச்சனை தானே கேட்குறீங்க ? அதுல தாங்க பிரெச்சனையே. நுழைவுத்தேர்வுல ஒரு பாடம் சம்ஸ்கிருதம். அதுலேயும் பாஸ் பண்ணாத்தான் மருத்துவம் படிக்கலாம். அப்ப எவனெவன் மருத்துவம் படிச்சிருப்பான்னு யோசிக்க முடியுதுங்களா ?
தை கவனிச்ச பனகல் அரசர், ஒரு சின்ன சட்ட திருத்தம் கொண்டுவந்தார். வச்சாரு பாருங்க சம்ஸ்கிருதத்திற்கு ஒரு ஆப்பு. நுழைவுத் தேர்வுலேர்ந்து சம்ஸ்கிருதத்தை நீக்கினார். அப்போதிலிருந்து தான் தமிழகத்தில் தமிழன் கல்லூரியில் மருத்துவம் படிக்க ஆரம்பித்தான். பனகல் அரசர் அன்னறைக்கு யோசிக்காமல் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்தின் எச்சிலையை இளையராஜாவைப் போல் நக்கிக்கொண்டு இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் தமிழனின் நிலை? அதோகதிதான். அர்ச்சனை தட்டு வாங்கினாத்தான் ஆப்ரேஷன்னு சொல்லியிருப்பானுங்க. இல்லன்னா காயாத்ரி மந்திரத்தை கண்ணைமூடிகிட்டு சொன்னால் தான் கண்ணாப்பிரேஷன்னு சொன்னாலும் சொல்லியிருப்பானுங்க.
தொண்டுன்னா, இப்படி செய்யுனும் தமிழுக்கு தொண்டு, தமிழன் தலைநிமிர்ந்து நிக்கிற மாதிரி. வேடந்தாங்கலுக்கு தண்ணியைத் தேடிவரும் வெளிநாட்டுப் பறைவகள் போல வெளிநாடுகளுக்கு தண்ணி தேடி வரும் அரசியல்வாதிகளுக்கும் விஐபிக்களுக்கும் வேடந்தாங்கலாக இருப்பது இல்லை தமிழ்த்தொண்டு.
ன்றைக்காவது ஒரு நாள் இளையராஜா தமிழுக்கு திரும்பக் கிடைப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
ஞ்சாவூர்ல பார்பனர்களின் பூநூலை அறுத்ததிற்கே மூக்கை சிந்தின எங்க "பட்டிமன்ற நட்டுவாங்க மேதை"க்கு இந்த பனகல் அரசர் போட்ட சட்டம் தெரிஞ்சவுடனே பார்பனர்களின் பொழப்பிலேயே மண்ணைப் போட்டுடாங்களேன்னு, ஓஓன்னு அழப்போறாரு பாருங்க...ஹி ஹி
டுபாகூர் தமிழ்ப் பணி தொடரும்...

தமிழ்ப் பணி?

பிரான்ஸ் தமிழ்ச் சங்கம் செய்துவரும் தமிழ்ப் பணிகள் என்னென்ன என்று திரு.ஆலன் ஆனந்தன் போட்டுக் கொடுத்துள்ளதை கவனிப்போம். இந்த வருட தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் மலரில் "ஆன்றோர் பெருமக்களாகிய பிரான்சு தமிழ் சங்கத்தினர்கள் தமிழ் மொழியை எப்படி போற்றுகின்றனர்" என்பதை இவர் எப்படி குறிப்பிடுகிறார் ?


"இந்தியாவிலிருந்து பிரான்சு வரும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், இலக்கிய வாதிகள் இவர்களுக்கு இங்குள்ள பிரான்சு தமிழ் சங்கத்தின் தலைவரும் பொதுச் செயலாளரும், வேடந்தாங்களாகவும், விருந்து படைப்பவர்களாகவும், சுற்றுலா ஏற்பாட்டாளர்களாகவும் இருந்து செயல்படுவார்கள். இவர்களின் செயலினிற்கு எவ்வித கைம்மாறும் கருதாது செய்திடும் பாங்கு பாராட்டத்தக்கது".


இப்பப்புரியுதா தமிழ்ப்பணி என்றால் என்னவென்று. அதுவும் இவர்கள் வெளியிடும் மலிரேலேயே இவர்களைப் பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்வது. பாவம் என்ன கோபமோ தெரியவில்லை இப்படி போட்டுக் கொடுத்துவிட்டார் ஆலன் ஆனந்தன். அவருக்கு நமது நன்றிகளை தெரிவித்தே ஆக வேண்டும்.


இதை விட சற்று மேலே சென்று விட்டார்கள் "விர்ச்சுவல்" பிரான்ஸ் சிவன் கோவில் கழகத்தார். அவுங்கத் தலைவருக்கு அவுங்களே பட்டம் கொடுத்துக்குவாங்க. இப்படி ஒரு கேவலத்தை வேறு எங்காவது கண்டதுண்ண்டா ? இங்குள்ள சங்கங்கள் எது செய்தோ இல்லையோ? பட்டம் கொடுப்பதில் மாமன்னர்கள். போட்டிபோட்டுக்கொண்டு கண்டவனுக்கெல்லாம் பட்டம் கொடுக்குறாங்க. பிரான்ஸ் சிவன் கோவில் என்று சொல்லிக்கொள்ளும் கூரையில்லாத அந்த கோவிலில் எப்படி தமிழ் பணி செய்கிறார்கள் என்று ஒரு முறை பார்ர்க நெர்ந்தது. அதாவது திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் அந்த கண்ட்றாவி நடந்தது. நாகரத்தினம் கிருஷ்ணா எழுதி தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துரையால் பரிசு அறிவிக்கப்பட்ட "நீலக்கடல்" புத்தகத்தை அந்த விழா மண்டப வாசலில் விற்றுக்கொண்டிருந்தார், யாரோ ஒரு பிரான்ஸ் சிவன் கோவில் கைத்தடி. நல்ல சேவை செய்கிறார்களே என்று நானும் ஒரு புத்தகம் வாங்க தலையை கூட்டத்தினுள் தலை நுழைத்தேன். ஐயா ஒரு புத்தகத்தின் விலை என்ன வென்று கேட்டேன். அதற்கு அவர், "எங்களுக்கு அடக்க விலை ஏழு ஈரோக்கள். அதற்கு மேல் மூன்று ஈரோ இலாபமாக வைத்து பத்து ஈரோக்களுக்கு இங்கு விற்கின்றோம்" என்றார். மேலும் அவர் சொன்னது, "நீங்கள் அதற்கு மேலும் அதாவது பத்து ஈரோக்களுக்கு மேலாக எதாவது அன்பளிப்பாக கொடுத்தாலும் வாங்கிகொள்வோம்" என்றார். வாங்குபவர்கள் பெயர் போட்டு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதையும் குறித்து வைத்திருந்தார். பல பேர் பத்து ஈரோக்களுக்கு மேலாக கொடுத்தே வாங்கியிருந்ததை எல்லோர் பார்வைக்கும் வைத்திருந்தார். நான் எப்பொதும் போல் வெண்ணாந்தையாக அந்த கைத்தடியை பார்த்து, "இப்படி அன்பளிப்பாக வரும் பணத்தை விழாவிமn முடிவில் நாகரத்தினத்திற்கு பணமுடிப்பாக கொடுப்பீர்களா?" என்று கேட்டேன். சர்வசாதரணமாக இல்லை என்றார். அப்படியென்றால் இந்த அன்பளிப்பு யாருக்கு? என்றேன். கைத்தடியிடம் பதில் இல்லை. இக்கேள்வியை நான் கேட்பதை பார்த்துகொண்டிருந்த மற்றவர்கள் உடனே அந்த கைத்தடியிடம் சென்று தாங்கள் அதிகப்படியாக கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.


எவனோ ஒருத்தன் நூறு புத்தகங்களுக்கு மேல் படித்து ஆராய்ச்சி செய்து ஒரு வரலாற்று புதினத்தை இரெண்டு மூன்று வருடங்களாக எழுதி வெளியிடுவான். அவனுக்கு விழா எடுக்கிறோம்முன்னு சொல்லிகிட்டு அங்கும் வியாபார சிந்தனையோடு செயல்படுவது தான் இவர்கள் தமிழ்ப் பணி. கோவில் பெயரைச் சொல்லி அர்ச்சனைத் தட்டு வித்து பொழைக்கிறதை பற்றி உங்களை யாராவது கேட்டோமா? அல்லது கேட்கத்தான் முடியுமா ? அறிவில்? சிறந்த பக்திமான்கள் அவர்களாகவே வந்து அர்ச்சனைத் தட்டு வாங்கி எமாந்து போவதை நாம் கேட்கப் போவதில்லை. யாருக்கோ பாராட்டு விழா ஆனால் நாங்கள் உங்களுக்கு மொய் எழுத வேண்டும். வெட்கமாயில்லை.


பெண்களின் முன்னேற்றத்தை பற்றிய பட்டிமன்றத்தின் நடுவர், தமிழ்நாட்டில் பெண்கள் விடுதலைக்காகவும், பெண்களின் கல்விக்காகவும் பாடுபட்டு, அதில் வெற்றியும் பெற்று, அந்த பெண்களாலேயே "தந்தை" என்ற அடைமொழி வழங்கப்பெற்ற, பெரியாரை, ஆண்மையில்லாதவன் என்றும், பெரியாருக்கு பிள்ளையே பிறக்கவில்லை என்றும் வாதாடினார். ஆனால் அந்த பட்டிமன்ற தலைவருக்கு ஈ.வே.ரா பெரியாருக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததும், அப்பெண் குழந்தை ஐந்து வயதில் நோய்வாய்ப் பட்டு இறந்துவிட்டதும் தெரியுமோ? தெரியாது.


ஆனால் அதுவே வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று நாக்கூசாமல் சொன்ன சங்கராச்சாரியார் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடத் தெரியும். இவரைப் போன்ற ஆர்.எஸ்.எஸ் பேர்வழிகளை வைத்துக்கொண்டு தான் இங்கு தமிழ் வளர்க்கின்றோம்.


மேலும் நான் பாரதி125பிரான்ஸ் விழா செயற்குழு கூட்டத்தில் தலைவர் தசரதனைப் பார்த்து, ஏன் இதுவரை சிதம்பரத்தில் தமிழுக்கு ஏற்பட்ட இழுக்கிற்கு தமிழ்ச் சங்க சார்பில் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கேட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போது மேலே சொன்ன பாட்டிமன்ற நடுவராக இருந்தவர் கூறியது, "அதே மாதிரி தஞ்சாவூர்ல பிராமணர்களின் பூநூல் அறுத்ததுக்கும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் , என்று. இப்ப புரியுதா அவர் யாருன்னு?


அனால் அதே நேரத்தில் பிரான்சில் உள்ள சில காலணிகள் விற்கும் கடைகளில், காலணிகளில் பாதம் பதியும் இடத்தில் பிள்ளையாரின் படமும், கிருஷ்ணரின் படமும் அச்சிடப்பட்டு விற்கப்பட்டதிற்கு கண்டனம் தெறிவித்தீர்களா? என்று இந்த பிரஹஸ்பதிகளிடம் கேட்டால், அதற்கு பதில் கண்டிப்பாக கிடையாது. கண்டனம் தெரிவிச்சால் காசு கொடுப்பங்களா? அப்படின்னா கால்களை கிளப்பிக்கொண்டு ஓடி வருவோம். வெட்கக்கேடு.


தமிழ்ப் பணி !? தொடரும் !!!