இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Thursday 10 May, 2007

தில்லுமுள்ளுகளும்? தள்ளுமுள்ளுகளும்?-2

தாவது ஒரு காரணத்தை கண்டுபிடித்து விழா எடுத்து புகழ்? சேர்க்கும் குள்ளநரிக் கூட்டம் ஒரு புறம். தமிழ் மொழிக்கு எதாவது செய்ய வெண்டும் என்று ஏதாவது ஒரு வாய்ப்பினை தேடும் பொழைக்கத்தெறியாத மற்றோருகூட்டம். எதுவாக இருந்தாலும் தனக்கு தனியாக என்ன இலாபம் கிடைக்குமுன்னு அலையும் வேறொரு ஈனக்கூட்டம். இவர்கள் எல்லோருக்கும் நல்ல புள்ளையா ஜால்ரா பொட்டு துண்டு போத்திக்க துடிக்கும் ஒரு பெரும் கூட்டம். இப்படி பிரான்ஸில் வாழும் தமிழ் பேசும் இந்தியப் பொருளாதார அகதிகளை பிரித்து விடமுடியும். இதில் தமிழ் பேசுவதையே கேவலமாக எண்ணும் பெரியோர்களை நான் சேர்க்கவில்லை.
மிழர்களின் சங்கங்கள் என்று பார்த்தால் இன்னும் பல சுவாரசியமான விவரங்கள் தெறியவரும். கணவன் மற்றும் மனைவி மட்டும் சேர்ந்து உருவாக்கி உள்ள சங்கங்கள் உள்ளன. வெரும் மூன்று பேர் மட்டும் சேர்ந்து ஒரு சங்கம் உருவாக்கி வெற்றிகரமாக வேறு உருப்பினர்களைக் கூட சேர்க்காமல் நடக்கின்ற கொடுமையும் உள்ளது. மற்றபடி பல "அவார்டு" மற்றும் "ஷீல்டு" கொடுக்கும் சங்கங்கள் உள்ளன. அப்படியான சங்கங்களில் தலைவரைத் தவிர மற்றவர்கள் அவ்வளவு பேரும் டம்மிகள். டம்மிகள் வாயைத் திறந்தால் உடனே சங்கத்திலிருந்து நீக்கப்படுவர். பல பஜனைப் பாடும் சங்கங்கள் ஆன்மீகத்திற்கும் பக்திக்கும் வித்தியாசம் தெறியாத தலைவர்களால் நடத்தப் படுவதும் உண்டு. சாமியார்களை வைத்து காசு பண்ண பார்க்கும் சங்கங்கள், இலைமறைவு காய்மறைவாக நடத்தப்படும் சாதி சங்கங்களும் உண்டு (முதலியார் மற்றும் வன்னியர்). கோவில் பெயர் சொல்லி அர்ச்சனை தட்டு விற்று தமிழ் வளர்க்கும் சங்கங்களும் உண்டு. இருபத்தைந்து வருடங்கள் தமிழ் பள்ளிகூடம் நடத்தி காணாமல் போனவர்களும் உண்டு. பிரான்ஸில் வாழும் புதுவை தலித்துக்களுகென்று ஒரு கூட்டமைப்பு இல்லாதது போலவே தோன்றுகிறது. சரி இவ்வளவு பேரும் சேர்ந்து பாரதிக்கு ஒரு விழா எடுக்க முற்பட்டால் விளைவு எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கும் போது அதனை செய்து முடிக்க தைரியாமாக முற்பட்டது பிரான்ஸ் தமிழ் சங்கம்.
தொடரும்