இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Tuesday 22 May, 2007

தில்லுமுள்ளுகளும் தள்ளுமுள்ளுகளும்-4

மீண்டும் வணக்குமுங்க. பாரதியாரின் 125 ஆண்டுவிழாவினை பாரீசில் கொண்டாட திட்டமிட்டுள்ள இந்த வேளையில், இந்தியாவிலிருந்து யாரை அழைக்கவேண்டும் என்பதைப் பற்றி சில தள்ளுமுள்ளுகள் நிலவுகின்ற அதைப்பற்றி சில யோசனைகள்.
பாரதிதாசன் நூற்றாண்டுக்கு பாரீசுக்கு அழைத்து வரப்பட்ட நெடுஞ்செழியனைப் போல் மிகப் பொருத்தமானவரை இப்போதும் அழைத்து வரவேண்டும். அட அது இன்னா மிகப் பொருத்தமானவருன்னு சொல்றன்னு தானே பாக்குறீங்க. அட அமாங்க பாரதிதாசனுக்கும் நெடுஞ்செழியனுக்கும் பல பொருத்தங்கள் உள்ளன. இருவரும் பெரியாரின் திராவிட கழக கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டவர்கள். அதெல்லாம் எங்களுக்கு தெரியும் வேறு எதாவது இருந்தா சொல்லுன்னு ஒரு குரல் கேட்கிறதால எப்படி தி.க கொள்கையை அவர்கள் உள்வாங்கி செரிக்கவைத்தர்கள் என்று பார்ப்போம். சாதியை பற்றி படா படா பாட்டெல்லாம் பாடின பாரதிதாசன் தன் பிள்ளைகளுக்கு என்று வரும் போது மட்டும், தேடிப்பார்த்து தான் சேர்ந்த சாதியான செங்குந்த முதலியாரிலேயே பெண் எடுத்து தன்னுடைய கொள்கையை நிலைநாட்டியது போல வேறு எங்காவது கண்டதுண்டா? சாமி சிலைக்கு முன்னால் விழுந்து கும்பிடுவது மட்டுமல்லாது மனிதன் மனிதன் காலில் விழுவதையே ஒருவனின் சுயமறியாதைக்கு எதிரானது என்று சொன்ன பெரியாரின் பாசரையிலிருந்து வந்த பழம்பெரும் புலியான நெடுஞ்செழியன் நெடுஞ்சான்கிடையாக ஜெயெலலிதாவின் காலில் விழுந்து வணங்கிய அழகை என்ன வென்று வர்ணிப்பது. பாரதிதாசன் என்ன சளைத்தவரா? செல்லம்மாளின்(பாரதியின் மனைவி) காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கியவர் இல்லையா? அதற்கு அவர் கொடுத்த விளக்கம் அதனிலும் பெரிது பெரிது. அதாவது பாரதியாரின் திருமேனியை பார்த்தவளாம் சேல்லம்மாள். குடித்துவிட்டு பெரியாஸ்பத்திரி வீதியில் விழுந்துகிடந்த இவரிடமிருந்து வேறு என்ன மாதிரியான சுயமரியாதை செயல்களை எதிர்பார்க்க முடியும்?
அதாவது பாரதிதாசனும் சரி நெடுஞ்செழியனும் சரி யாரோ ஒருவர் சிந்தித்ததை இவர்கள் காப்பி அடித்தார்கள். அவ்வளவுதான். அவர்களிடம் சொந்த சரக்கில்லை. அதனால் விரைவில் வெளுத்துவிட்டார்கள்.
ஆனால் பாரதியாரும் அப்படி இல்லை பெரியாரும் அப்படி இல்லை. அவர்கள் சொன்னது செய்தது எழுதியது அவ்வளவும் அவர்கள் சொந்த சிந்தனை. அதனால் தான் அவர்களால் இன்றும் நிலைத்திருக்க முடிகிறது. இதற்கு முன்னதாக வந்துள்ள சில கட்டுரைகளில் பாரதியாரை பெரியாருடன் ஒப்பிட்டு எழுதியிருப்பபதை அனேகம் பேர் படித்திருப்பீர்கள். பாரதியாரை பார்பனிய காவலாலியாகக்கூட சித்தரக்கப் பட்டிருப்பதை கண்டு சற்று கவலையும் உற்றிருக்கலாம். அங்கே பாரதியாரையும் பெரியாரையும் ஒப்பிட்டவர் ஒரு சின்ன விஷ்யத்தை விட்டுவிட்டார். அதாவது அவர்கள் இருவரும் வாழ்ந்த கால அளவை மறந்துவிட்டார். அவர்கள் தோன்றிய சமூகங்களையும் மறந்துவிட்டார். பெரியார் தன்னை பற்றி கூரும் பொழுது தான் நாற்பது வயது வரை காலியாக இருந்தேன், மைனராக இருந்தேன், கோவில் தர்மகத்தாவாக இருந்தேன் என்றெல்லாம் சொல்கிறார். கோவில் தர்மகத்தாவாக இருந்தபோது தான் தேவதாசி முறையை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததாக கூறியுள்ளது அனேகம் பேர் அறிந்ததே. அனால் பாரதி வாழ்ந்ததே நாற்பது ஆண்டுகள். அதற்குள் அந்த காலக்கட்டதிற்கு முடிந்ததை செய்துள்ளார். பெரியார் போல் தொண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், பாரதியார் அளவுக்கு பெரியாரே செய்திருக்க முடியுமோ என்பது சந்தேகமே. மேலும் பெரியார் தோன்றியதோ சூத்திரர்ராக. அதாவது பாரதியாரைப் போல பிராமணராக அல்ல. பிராமனர்கள் தமிழ்பேசும் பிராமணர் அல்லாதோர் அனைவரையும் சூத்திரராக பார்பது என்பது மரபு. அஹ்ரஹாரத்தில் பிறந்த பாரதியார் சிறு வயதில் எழுதிய ஒன்றை கற்பக வினாயகம் இப்படி சொல்கிறார் : தன் தந்தை வறுமைப்பட்டதை எழுதும்போது கூட, பார்ப்பனக் குலம் கெட்டு அழியும் கலியுகம் ஆதலால் தம் தந்தை வேர்வை சிந்த உழைக்க நேர்ந்ததாகச் செப்பும் பாரதியிடம் வெளிப்பட்டது சாதி உணர்வில்லாமல் வேறென்ன? மனு தர்மத்தின்படி வேர்வை சிந்த உழைப்பது பார்ப்பன தர்மம் இல்லை என்ற கோபம்தானே பாரதியிடம் வெளிப்பட்டது?
தந்தை இறக்கும் போது பாரதியாருக்கு வயது ஏழு அல்லது எட்டு வயது மட்டுமே. அப்படி ஒரு சிறுவனாக இருக்கும் போதே தன் குலத்தைப் பற்றியும் தன் குலப்பெருமையை காக்கும் மனுதர்மத்தைப் பற்றியும் அறிந்து கொண்டது மட்டுமில்லாமல், அதற்கு பங்கம் வரும் வேளை வெகுண்டு எழந்து சாடி, பாட்டுப் படிக்க முடிந்தது அவரின் பெருமையேன்றி வேரேதும் இல்லை. அதுவே வாலிபனான பிறகு பாரதி சாதிக் கொடுமையைக் கான சகிக்காமல் பஞ்சமனிடம் இருந்து தன்னை விலக்குவது, தானணிந்துள்ள பூநூல் என்று உணர்ந்த மாத்திரம் அதனை அறுத்தெறிந்த மாபெரும் புரட்சியாளன். பஞ்சமனை தன் அளவுக்கு சமமாக்க அன்றைக்கு அவனுக்கு தோன்றிய உபாயம் அவனுக்கும் பூநூல் அணிவிப்பதே அன்றி வேறில்லை.
னால் இன்றக்கும் பாரதிக்கு வந்ததைப் போல் பிரான்சில் வாழும் தமிழனுக்கு அப்படி ஒரு தன்மான உணர்ச்சி வரவில்லையே என்பதை நினைக்கும் போது தான் மிகவும் வருத்தாமாக இருக்கிறது. பிரான்சில் சுமார் முப்பது தமிழ் சங்கங்கள் இருந்தும் தமிழ்நாட்டில் தமிழுக்கு இழுக்கு வரும் சமையம் ஒரு சிறு கண்டன அறிவிப்பு கூட வெளியிட முடியாத அளவிற்கு முதுகெலும்பு அற்ற மண்புழுவைவிட கேவலமான நிலையை என்னவென்று சொல்லுவது. உதாரணத்திற்கு தில்லையம்பலத்தில் தமிழில் வழிபட சென்ற தமிழ் ஓதுவார் அவர்களை அனுமத்திக்காதது மட்டுமல்லாமல் நீதிமன்றத்தின் உதவியுடன் கைதும் செய்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆப்பு வைத்த தில்லை மூவாயிரங்களை எதிர்த்து ஒரு சிறு கண்டனம் கூட தெறிவிக்க முடியாமல் அஞ்சி நடுங்கும் துப்புக் கெட்ட சங்கங்கள் எப்படி பாரதிப் போன்ற புரட்சியாளனுக்கு விழா எடுக்க முடியும்?
தில் இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால் சிதம்பரத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு ஏன் நீங்கள் கண்டனம் தெறிவிக்கவில்லை என்று நான் கேட்டதற்கு, முப்பத்தைய்ந்து(FAFI) சங்ககளின் தலைவன் நான் என்று மார்தட்டும் அந்த பெருந்தகை சொன்ன பதில் என்ன தெரியுமா? "அட அப்படியா?, எப்ப நடந்தது இது?, இதை ஏன் நீங்கள் வந்து எங்களிடம் சொல்லவில்லை?, சோல்லியிருந்தால் கண்டனம் தெறிவித்திருக்கலாமே...''. னென்னே னென்னே.... அதாவது அவருக்கும் அவர் சார்ந்துள்ள சங்கங்களுக்கும் தமிழ்நாட்டில் நிகழ்காலத்தில் என்ன நடக்கின்றது என்பதே தெரியவில்லை. அப்படியிருக்க வரலாற்று வீரன் பாரதியை பற்றி இவர்களுக்கு என்ன என்ன தெரியும் என்பதை உங்களின் ஊகத்திற்கே விட்டுவிடிகிறேன். பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் இவர்களுக்கு நெடுஞ்செழியன் கோடுத்த கொட்டும் வீணாகிவிட்டதென்றே எண்ணுகிறேன். அதாவது பாரதிதாசனை பற்றி தெரியாமல் அவருக்கு விழா எடுக்காதீர்கள் என்ற வகையில் நெடுஞ்செழியன் தமிழில் சொன்னது இவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லையோ என தோன்றுகிறது.
இப்படி இன்றும் அறியாமையில் புதைந்து கிடக்கும் இவர்கள் போன்றவர்களை பார்த்து ஆத்திரப்படுவதா அனுதாப்படுவதா என்று விளங்காமல் தான் மனம் வெதும்பி அன்றே பாரதி இப்படிப் பாடினான் போலும்:
"நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால் "
தொடரும்...