இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Friday 1 June, 2007

சில கவனிக்கதக்க பின்னூட்டங்கள் - 1

இந்த இரெண்டு நாட்களில் எனக்கு வந்த இருவகையான பின்னூட்டுகள் இவை. இப்பின்னூட்டுகள் கவனிக்கப் படாமல் சென்று விடக்கூடாது என்பதற்காக தனிப்பதிவிட்டுள்ளேன். வேறொன்றுமில்லை.
முதலாவது பின்னூட்டு(feedback)
திரு.பெஞ்சமின் லெபோ
தங்கள் தளத்தை ஆர்வமுடன் படித்து வருகிறேன். இப்படி ஒரு தளம் தேவைதான். தமிழுக்கு இச்சங்கங்கள் ஆற்றி வரும் 'அளப்பரிய சேவையை' மக்களுக்குத் துகில் உரித்துக் காட்டிவரும் பணி சிறக்க வாழ்த்துகிறேன். வாய்மையே வெல்லும்! வெல்லட்டும்! பாரதி 125 ஆம் ஆண்டு விழாக் குழவில் (3 -ஆம் அமாவில்) பார்வையாளனாகக் கலந்துகொள்ள அடியேன் வந்ததும் உண்மை, அங்கே அனைவரும் அடித்த கூத்தைக் கண்டு வருத்தம் அடைந்ததும் உண்மை! பேராசிரியர் சக்திப்புயல் எழுப்பிய நியாயமான கேள்விக்கு (பாரதி விழாவில் தமிறிந்தவர்களுக்கு, தமிழ் அறிஞர்களுக்கு ஏன் இடம் தரவில்லை...?) பதில் இல்லை. விவாதங்களும் ஆக்க பூர்வமானதாகத் தோன்றவில்லை. பொன்னான நேரத்தை இது போன்ற புண்ணாக்கு கூட்டங்களுக்கு விரயமாக்க விரும்பாமலும் மனம் வெதும்பியும்தான் 'முத்தமிழையும் மொத்தமாகக் குத்தகை எடுத்திருக்கும் இத்தனை தமிழ் அறிஞர்கள் இங்கே இருக்கையில் தமிழறியாத் தறுதலை எனக்கு இங்கென்ன வேலை " என்று பொங்கி உரைத்து வெளியேறினேன்.
என் சொற்களின் முழப்பொருளையும் உணர்ந்து கொண்டவர்கள் ஒரு சிலரே (அவர்களுள் பேராசிரியர் சக்திவேல், திரு பொன்னரசு முதலியவர்களுடன் தாங்களும் அடக்கம். பிறர்க்கு 1 விழுக்காடு கூட விளங்கவில்லை, விளங்காது என்பதை நானறிவேன்!).
பின்னொரு நாள் தசரதன், பார்த்தசாரதி இருவரும் வேறோரு விழாவில் சந்தித்த போது எனக்குச் சில சப்பைக் கட்டு விளக்கங்கள் அளித்து இனி எல்லாக் கூட்டங்களுக்கும் அடியேன் வரலாமென்றும் அவர்களோடு சேர்ந்து விழாவில் பணியாற்றலாம் என்றும் வெகு தாராளமாகக் கூறினார்கள். பாரதிக்குக் கடைசியில் காக்கைகள்தாம் விழா எடுக்கும் என்பதை அறிந்துதான 'காக்கை குருவி எங்கள் ஜாதி' எனப் பாடினார் போலும் மகாகவி!
அன்புடன்
பெஞ்சமின் லெபோ
30 May, 2007 8:51 PM
----------------------------------------------------
இரெண்டாவது பின்னூட்டு(feedback)

Anonymous said...

பார் புகழும் பாரதிக்கு விழா எடுப்பதில் இவ்வளவு பிரைச்சினைகளா. கடல் கடந்து சென்றாலும் தமிழன் மடல் மூலம் போர் புரிவது நம் இனத்துக்கு மட்டுமேசாத்தியம். ஆசையை அழி என்று சொன்னான் புத்தன். அந்த ஆசையால்தான் அனைத்துப் பிரைச்சினைகலுமே. விழா எடுப்பது என்பது அனைவரும்ஒன்று சேர்ந்து ஒவ்வொருவரும் பங்குகொண்டு சிறப்பாக நடந்தேற வழிவகுக்க வேண்டும். பணத்தாசைகொண்டவர் விழா நடத்தினால் பிரச்சினை வருவது இயல்பு. அவரே ஒழுங்கான ஒரு குழு அமைத்து அனைவருக்கும் தகுதியான பொறுப்புக்கள் கொடுத்து விழா முடிவில் வரவு செலவு கணக்கை உறுப்பினர் மற்றும் மக்கள்முன் வைக்க தயங்காமல் இருப்பாரென்றால் பிரச்சினை வரவாய்ப்பில்லை.அதுவே இலக்கிய விழாவாக இருப்பின் அவருக்கு இலக்கியத்தில் ஈடுபாடும்,இலக்கியசிந்தனையும் இருக்க வேண்டியது இன்றியமையாதது. அப்படியில்லாதபட்சத்தில் அதை புரிந்துகொண்டு தான் விலகி மற்றவர்க்கு இடம் கொடுக்கவேண்டும். அப்படி செய்யாதிருப்பாரேயானால் கண்டிப்பாகஎதையோ, எந்த பலனையோ எதிர்பார்த்து தன் சொந்த சுயநலத்திற்காக செய்கிறார் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர்தல் வேண்டும். பதவி மோகம் மற்றும்பந்தா பேர்வழிகளும் இதில் அடங்கும்.எனவே அது போன்றவர்களை வெளிச்சம் போட்டுக்காட்டி, ஆர்வமிக்க அறிஞர்களை அவர்கள் இளைஞர்களாய் இருந்தாலும் விழா எடுக்கச் செய்யவேண்டும். கடந்த சில தினங்களாக தங்கள் கருத்த்க்களைபடித்த நான் தாங்கள் அந்த முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளீர்கள் என்பதாக என்னுகிறேன். எனவே விழாநடந்தேற வழி செய்து பாரதி பெயரையும் பாரிசு பெயரையும் காப்பீராக.